அண்ணா பல்கலைக்கழகத்தின் 8 உறுப்பு கல்லூரிகளில் ஏஐசிடிஇ விதிமுறைகளை மீறி டீன் பதவியில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன. இவ்வாறு மாநிலம் முழுவதும் 488 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.