சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மும்பையை வென்று வெற்றிக் கணக்கை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கேப்டனாக 99% முடிவுகளை ருதுராஜ் தன்னிச்சையாக எடுப்பதாக தோனி கூறியுள்ளார்.
“99 சதவீத முடிவுகளை ருதுராஜ்தான் எடுக்கிறார். ஃபீல்ட் பிளேஸ்மென்ட், பவுலர்களை ரொட்டேட் செய்வது என அனைத்து முடிவுகளும் அவருடையது. தலைமை பண்பு அவரது இயல்பில் உள்ளது. எனது பங்கு எதுவும் அதில் இல்லை” என தோனி கூறியுள்ளார்.