Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: ஆளுநர் ஆர்.என்.ரவியின் திராவிட எதிர்ப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » ஆளுநர் ஆர்.என்.ரவியின் திராவிட எதிர்ப்பு
அரசியல்தமிழ்நாடுவிமர்சனம்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் திராவிட எதிர்ப்பு

EDITOR
Last updated: October 30, 2024 3:44 pm
EDITOR
Published October 30, 2024
Share
SHARE

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் பொன்விழா மற்றும் இந்தி மாத நிறைவு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழி பேசும் தமிழ்நாட்டில் இந்தி மாத விழா என்ற அறிவிக்கப்பட்டது பலத்த எதிர்ப்புக்குள்ளானது. அரசியல் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதமும் எழுதினார். இந்த நிலையில் நேற்று சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாத நிறைவு விழா நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது என்றும், இந்த நிலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மொழி சமஸ்கிருதம் என்று பேசினார். அதோடு அல்லாமல் இந்தியை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, ‘‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’’ என்ற வரி தவிர்க்கப்பட்டு பாடப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் தனது எக்ஸ் தளத்தில், ‘‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். அவர் ஆளுநரா? ஆரியநரா?” என்று மிகவும் காட்டமாக பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டு பாடச் சொல்வரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். திராவிடம் என்ற வாசகத்தை தவிர்த்தது மிகப்பெரிய பித்தலாட்டம் என்று அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநருக்கு இதுபோன்ற எதிர்ப்புகளும், கண்டனங்களும் ஒன்றும் புதிதல்ல. ஆளுநராக பதவியேற்றதில் இருந்தே அவர் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

அதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தாலும் அவரது சர்ச்சை பேச்சுகளும், சர்ச்சை நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்காமலும், முக்கிய மசோதாக்களில் கையெழுத்திடாமலும் மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுக்கொண்டு முடிவு எடுக்காமல் இருந்தது போன்ற நடவடிக்கைகளுக்கு கோர்ட் குட்டு வைத்தும் ஆளுநர் தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.
தமிழ்மொழியை இழிவுபடுத்தி, இந்தியையும், சமஸ்கிருதத்தையும் உயர்த்தி பிடிப்பதை தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை என்பதை அவர் உணரவில்லை.

அதற்கு உதாரணமாகத்தான் திராவிடம் என்ற வார்த்தை தவிர்ப்பு சம்பவம் நடந்துள்ளது. கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறாக விட்டுவிட்டதாக தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை என்று ஆளுநர் ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்திருப்பது திராவிடத்துக்கு எதிராக இஷ்டபடி நடந்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் நடந்ததாகவே கருதப்படுகிறது. எனவே, இனியும் தமிழ்நாட்டு ஆளுநராக ஆர்.என். ரவி நீடிக்கலாமா என்பது கேள்விக்குறியே.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

‘ஆபரேஷன் சிந்தூர்’ தலைப்புக்கு போட்டி போடும் சினிமா நிறுவனங்கள்

EDITOR
EDITOR
May 8, 2025
மதுரை சித்திரை திருவிழா.. கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம்..!!
2026 தேர்தலில் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்விதான்: எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!!
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய கோரிக்கை வைத்த சிறுவனுக்கு முதல்வர் பதில்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு நல்குவதாக மோடியிடம் புதின் உறுதி!

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?