புதுடெல்லி: டெல்லியில் உள்ள அக்பர் சாலை, ஹுமாயூன் சாலை பெயர் பலகைகளில் கருப்பு மை பூசி, அந்த அறிவிப்பு போர்டு மீது ‘ச்சாவா’ (Chhava) பட போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ‘சாவா’ திரைப்பட தாக்கத்தின் காரணமாக ரசிகர்கள் இதனைச் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில், இளைஞர்கள் சிலர் அக்பர் சாலை, ஹுமாயூன் சாலை என்ற பெயர் பலகைகளில் கருப்பு பெயின்டை அடித்து பின்பு அதன்மேல் ‘ச்சாவா’ பட போஸ்டரை ஒட்டுவது பதிவாகியுள்ளது. இது குறித்து போலீஸார் கூறுகையில், "போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெயர் பலகைகளில் செய்யப்பட்டிருந்த அத்துமீறல்களை சரிசெய்து அதனை பழைய நிலையில் மீட்டெடுத்தனர்.