லீட்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் உடன் 2-ம் நாள் ஆட்டத்தை முடிவு செய்தது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லீட்ஸ் நகரில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள் இந்த ஆட்டத்தின் முதல் நாளன்று சிறப்பாக பேட் செய்து 85 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்திருந்தது.