சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் வீரர்களுக்கான ஏலத்தில் தனது பெயரை அஸ்வின் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். அதோடு வெளிநாடுகளில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக தனது எதிர்கால கிரிக்கெட் செயல்பாடு குறித்தும் அஸ்வின் வெளிப்படையாக பேசியிருந்தார்.