சென்னை: பயங்கரவாத அச்சுறுத்தல், கடன் சுமையால் மூழ்கும் பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் நிலவில் தரையிறங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் விண்வெளி முகமையான ‘SUPARCO’, இதுவரை தன்னிச்சையாக வடிவமைத்த செயற்கைகோள் அல்லது விண்வெளி திட்டம் என எதையும் மேற்கொண்டது இல்லை. அனைத்தும் சீனாவின் ஆதரவுடன்தான் மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றம் சார்ந்த அச்சுறுத்தலை சமாளிப்பது தொடர்பாக கடந்த மாதம் பாகிஸ்தான் விண்ணில் நிலைநிறுத்திய ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள் சீனாவில் இருந்து ஏவப்பட்டது. பாகிஸ்தான் கொடி உடன் அது விண்ணில் ஏவப்பட்டு இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியான பணிகளை சீனா மேற்கொண்டதாக தகவல்.