ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இந்தக் கொடூர தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளில் ஒருவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பைசரன் பள்ளத்தாக்குக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.