அறிவியல் துறையைச் சேர்ந்த பெண்களுக்கான சர்வதேச தினமான பிப்ரவரி 11-ம் தேதி ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அருமையான திட்டமொன்றை அறிவித்துள்ளார். வீட்டிலிருந்து பணி என்ற நடைமுறையின் அடுத்தகட்ட பாய்ச்சலாக தொலைதூரத்தில் இருந்து பணியாற்றுதல் (Remote work), இணைந்து பணியாற்றும் இடங்கள் (Co-working spaces), அண்டை பணியிடங்கள் (Neighborhood workspaces) ஆகியவற்றை ஆந்திராவில் உள்ள நகரங்கள், சிற்றூர்கள், மண்டலங்கள் அளவில் பெரிய அளவில் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் தகவல் தொழில்நுட்ப திட்டம் 4.0 என்ற பெயரில் உருவாகும் இத்தகைய பணியிடங்களுக்கான ஆதரவையும், உதவிகளையும் அரசே செய்யும் என்று அறிவித்துள்ளது மிகப் பெரிய தொலைநோக்குத் சிந்தனையாக பார்க்கப்படுகிறது.