புதுடெல்லி: வக்பு சொத்துகளை பதிவு செய்யவும், சரிபார்க்கவும், கண்காணிக்கவுமான பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் உமீத் (UMEED) என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதனை தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் வக்பு சொத்து நிர்வாக வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதோடு, சாமானிய முஸ்லீம்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.