புதுடெல்லி: இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும் அடங்கும். காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
அதற்கு பதிலடியாக இந்திய பாதுகாப்பு படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த 9 தீவிரவாத முகாம்கள், பாகிஸ்தானின் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து இந்திய பாதுகாப்புப் படைகளை மேலும் பலம் வாய்ந்ததாக மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 15 ஆண்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.