தருமபுரி: “தமிழக ஆளுங்கட்சியினர் செய்துள்ள முறைகேடுகள் அனைத்தும் ஓரிரு மாதங்களில் ஒவ்வொன்றாக வெளிவரும்” என பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார். மேலும், “அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார் என்றெல்லாம் திமுகவினர் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர்” என்று அவர் சாடினார்.
தருமபுரியில் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது: “அமலாக்கத் துறை தமிழகத்தின் டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பலரும் விரைவில் அகப்படுவர். ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் ஆளும்கட்சியினர் செய்துள்ள முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவரும். டெல்லியில் ஊழல் வழக்கில் முதல்வர் கைதாகி, ஜாமீனில் வெளிவந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது போலவே தமிழகத்திலும் நடக்கும்.