சமீப காலமாக எங்கு பார்த்தாலும் பண மோசடி. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை மொத்தமாக இழந்துவிட்டு கதறித் துடிக்கிறார்கள் அப்பாவி மக்கள். சாத்தியமே இல்லாத 22 சதவீத வட்டி தருவதாக சொல்வதை நம்பி ஏமாறுகிறார்கள்.
சமீபத்திய உதாரணம் தெலங்கானாவின் பால்கன் இன்வாய்ஸ் டிஸ்கவுண்டிங் நிறுவனம். 7,000 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,700 கோடி வரை ஏமாற்றி பணம் பறித்துவிட்டு இரவோடு இரவாக கம்பெனியை மூடிவிட்டு ஓடி விட்டனர். 2021-ல் இருந்து இந்த நிறுவனம் இயங்கி வந்திருக்கிறது. இந்த மோசடி விளம்பரங்கள் அனைத்தும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் மட்டுமே வந்திருக்கிறது.