சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது பிப். 12ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். கட்சியில் எந்தப் பிளவும் இல்லை; தனக்கு இருந்த ஆதரவு நீடிக்கிறது; எந்த மாற்றமும் இல்லை. பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பியதாக கூறிய தேர்தல் ஆணைய தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The post அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பிப். 12ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.