திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக அதிமுக சார்பில் எம்எல்ஏ மரகதம் தலைமையில், மதுராந்தகம் பகுதியில், வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் நல்லூர் கிராமத்தில் திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. மேலும், அங்கு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயளாலர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் ஆகியோர் கலந்து கொண்டு நல்லூர் கிராமத்தில் வீதிகளில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தனர்.