சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் பேரவை தலைவர் அப்பாவு மீதான அதிமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் 16 பேர் கடந்த ஜனவரி 11-ம் தேதி கடிதம் வழங்கி இருந்தனர்.