
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி ஒருமித்து கருத்துகள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அகில இந்திய தலைமை முடிவின்படி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி, ஒருமித்து கருத்துக்கள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும்.

