சென்னை: ஓய்வு குறித்து தான் முடிவு செய்யவில்லை என்றும், அதை தனது உடல்தான் முடிவு செய்கிறது என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பலரும் தோனி ஓய்வு பெற வேண்டுமென சொல்லி வருகின்றனர். இதில் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் அடங்குவர்.