
மும்பை: பண மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமங்களுக்கு எதிராக பண மோசடி வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

