புதுடெல்லி: பிராமணர்களை விமர்சித்த சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப், மன்னிப்பு கேட்ட பின்பும் பிரச்சினை தொடர்கிறது. அவரது முகத்தில் மை பூசுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு என சர்ச்சைக்குரிய வகையில் ராஜஸ்தானின் சாணக்ய சேனா அறிவித்துள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருப்பது சாணக்ய சேனா எனும் உயர் சமூக அமைப்பு. இது, திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், பிராமண சமூகத்துக்கு எதிராக தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்களை கண்டித்துள்ளது.