புதுடெல்லி: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்சியாக குற்றம்சாட்டி வருகிறது.