வளர்ந்த பாரதத்தை உருவாக்க நாட்டின் அனைத்து துறைகளிலும் சிறந்த தலைமை தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி குஜராத் தலைநகர் காந்தி நகரில் 22 ஏக்கர் பரப்பளவில், தலைமைப் பண்பு பள்ளி (சோல்) கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்துக்கு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கடந்த 14-ம் தேதி அடிக்கல் நாட்டினார். ரூ.150 கோடி செலவில் கட்டப்படும் தலைமைப் பண்பு பள்ளி அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.