புதுடெல்லி: இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான உறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், இந்த உறவு தொடர்ந்து வலுவடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ரந்திர் ஜெய்ஸ்வாலின் வாரந்திர செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால், "அந்த தடைகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். அது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என கூறினார்.