இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஆக.1-ம் தேதி (இன்று) முதல் 25 சதவீத வரிவிதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருப்பூர் டாலர் சிட்டி என்றழைக்கப் படுகிறது. திருப்பூரில் பின்னலாடைத் தொழில் கடந்த பல ஆண்டு காலமாக கோலோச்சி வரும் நிலையில், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பின்னலாடைத் துறை உட்பட இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்படுமென தொழில்துறையினர் கருதுகின்றனர்.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 30 சதவீதம் ஏற்றுமதி, அமெரிக்க சந்தையை நம்பி இருப்பதால், இந்த வரி விதிப்பு அவர்களது ஏற்றுமதியை வெகுவாக குறைக்கும். அமெரிக்கா இந்த வரியை விதிப்பதற்கு, இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா விதித்திருந்த வர்த்தகக் கட்டுப்பாடுகளை காரணம் காட்டியுள்ளது.