புதுடெல்லி: “பிரதமர் நரேந்திர மோடியை தேர்தலில் தோற்கடிக்க அமெரிக்கா 21 மில்லியன் டாலர் கொடுத்தது என்றால், இந்திய உளவுத் துறையும், ‘ரா’ பிரிவும் எங்கே போயின?” என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கெரா, "பிரதமர் மோடியை தோற்கடிக்க அமெரிக்கா 21 மில்லியன் டாலர் உதவியை வழங்கியதாக பொய்யான ஒரு கதை பரப்பப்படுகிறது. அப்படியானால், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஐ/பி, ரா போன்ற அமைப்புகள் எங்கே போயின? உங்கள் ஆட்சியில், இந்தியாவுக்குள் 21 மில்லியன் டாலர் வர முடிந்தால், அது பாஜகவின் முகத்தில் விழுந்த அறைதானே.