மத்திய கிழக்கில் அமெரிக்கா – இரான் இடையேயான போர், இப்போது கொழும்புவின் ராஜதந்திரக் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் தென்பகுதியான காலி கடற்பரப்பில் இரானியப் போர்க்கப்பல் ‘ஐஆர்ஐஎஸ் டெனா’ தகர்க்கப்பட்ட விவகாரத்தில், இலங்கை அரசுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ‘உத்தியோகபூர்வ அழைப்பு’ குறித்த சர்ச்சை, இலங்கையின் நடுநிலைமை ஒரு ‘ராஜதந்திரப் பொறி’யாக மாறியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

