நாகப்பட்டினம்: அமெரிக்காவில் இந்திய பொருட்களை இறக்குமதி செய்ய 50 சதவீதம் வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட 500 டன் இறால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால், இறால் விவசாயிகள் தங்கள் தொழில் பெருமளவில் பாதிப்பை சந்திக்கக் கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
நாட்டின் பெரும் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தொழில்களில் கடல் உணவுப் பொருட்கள் பிரதான இடத்தை பெற்றுள்ளன. அவற்றில் இறால்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கடலில் இருந்து பிடிக்கப்படும் இறால்கள் மற்றும் வளர்ப்பு இறால்கள் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.