வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கையில் பரஸ்பர வரிவதிப்பு முறை கொண்டுவரப்பட்டது. இந்த புதிய வர்த்தக கொள்கையை ஏற்கும்படி ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் இதர நாடுகளை அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவின் வரி வருவாய் கடந்த ஆகஸ்ட்டில் 159 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது கடந்தாண்டு இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகம்.