வாஷிங்டன்: அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட வலியுறுத்தி டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்காவில் மின்உற்பத்தி திட்டங்களை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் தந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. என்றாலும், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட வலியுறுத்தி டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 265 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கை கைவிடக் கோரும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய வேகத்தில் பேச்சுவார்த்தை நடந்தால் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கு ஒரு மாதத்தில் கைவிடப்படும். அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் அதானியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட வலியுறுத்தி டிரம்ப் அரசுடன் அதானியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.