புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் கம்பா பிரவீன், அமெரிக்காவில் முதுகலை அறிவியல் (Master of Science) படித்துக்கொண்டே மில்வாக்கியில் உள்ள ஒரு கடையில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். பிரவீன் தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் கேஷம்பேட்டையைச் சேர்ந்தவர். மாணவர் உயிரிழந்தார்.
தெலங்கானா மாணவர்.. மகனின் மரணம் குறித்து மாணவனின் தந்தையான ராகவுலு கூறுகையில், “காலையில் எனது மகனிடம் வந்த அழைப்பை நான் தவறவிட்டிருந்ததை அறிந்து அவனுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தேன். ஒரு மணிநேரம் கடந்தும் பதில் ஏதும் வராததால், மகனின் எண்ணுக்கு அழைத்தேன். ஆனால் போனை வேறு ஒருவர் எடுத்துப் பேசினார். இதனால் சந்தேகமடைந்த நான் தொடர்பைத் துண்டிதேன்.