
கலிபோர்னியா: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய டிரைவர் ஒருவர் போதையில் லாரியை ஓட்டி, கார் மீது மோதினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜஷன் ப்ரீத் சிங் (21). இவர் கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக ஊடுருவினார். இவரை கலிபோர்னியா எல்லையில் ரோந்து போலீஸார் கைது செய்தனர்.

