ஹைதராபாத்: அமெரிக்காவில் நடைபெற்ற சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், டேகுலபல்லி பகுதியை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் மோகன்ரெட்டி. இவரது மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா தேவி. இவர்களுக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகளான பிரகதிக்கும், சித்திபேட்டையை சேர்ந்த ரோஹித் என்பவருக்கும் திருமணம் நடந்தது.