புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப் அறிவித்த 50% வரி விதிப்பு அமலானது முதல் இந்தியாவின் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கவிருக்கும் நேரத்தில் அமலுக்கு வந்துள்ள இந்த வரிவிதிப்பு திருப்பூர், நொய்டா, லூதியானா மற்றும் நாட்டின் பிற ஜவுளி நகரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்குள்ள ஏற்றுமதியாளர்கள்தான் போலோ சர்ட்ஸ், ரிசார்ட் உடைகள், கப்டான் வரை அமெரிக்காவில் உள்ள உலகளாவிய பிராண்டுகளுக்கு தேவையான அனைத்தையும் வழங்குகின்றனர். இந்த நிலையில் கூடுதல் வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் ஆர்டர்களை நிறுத்திவிட்டனர். இதனால் வரிவிதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.