தூத்துக்குடி: திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை வழிபாடு நடத்தினார்.
தூத்துக்குடி, நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை ஆட்சியர் க.இளம்பகவத், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வரவேற்றனர். பின்னர், கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதிக்கு வந்த ஆளுநரை, கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.