
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும், காமராஜருக்கும் இடையே சில அபிப்பிராய பேதங்கள் இருந்து வந்தன. அதற்கான காரணம், சந்தர்ப்பச் சூழல்களை நம்மால் அறிய முடியவில்லை. இருபெரும் தலைவர்களுக்கு இடையேயான முரண்பாடுகளால் தமிழக அரசியல் களம் தர்மசங்கடமான நிலைக்கு ஆட்பட்டது என்றால் அது மிகையல்ல.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் பசும்பொன் தேவர். ஆரம்ப காலத்தில் காமராஜருக்கும், பசும்பொன் தேவருக்கும் நல்ல இணக்கமான சூழல் இருந்து வந்துள்ளது. விருதுநகர் மன்றத் தலைவராக காமராஜரை வெற்றி பெற வைப்பதற்கான வேலைகளில் பசும்பொன் தேவர் தீவிரமாக இறங்கி களப்பணியாற்றினார். இதற்கிடையே ஜவஹர்லால் நேருவுக்கும், பசும்பொன் தேவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமே, காமராஜருடனான கருத்துவேறுபாடுகளுக்கு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது உண்டு.

