தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் 9 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நேற்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதால் 75 ஆயிரம் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2015 நவம்பர் மாதம் முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அகவிலைப்படி உயர்வு வழங்க மறுத்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.