விவசாயிகள் வழக்கமான அரிசி சாகுபடிக்கு பதிலாக தானியங்களை பயிரிடும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரிசியின் பொருளாதார நம்பகத்தன்மைக்காக உள்நாட்டு விவசாயிகள் அதனை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்தியாவின் அரிசி உற்பத்தியில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.