புதுடெல்லி: உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (ஏஎம்யு) முதல்முறையாக ஹோலி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகமான ஏஎம்யுவில் முஸ்லிம்களின் அனைத்து நிகழ்வுகளும் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், ரமலான் மாதத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளில் ஈத் மிலன் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில், ஹோலி கொண்டாடவும் அனுமதி கோரி இந்து மாணவர்கள் சிலர் நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.