அந்நிய மரமான சீகை பூத்துக் குலுங்குவதால், நீலகிரி மாவட்டமே மஞ்சள் மயமாகியுள்ளது. காண்பதற்கு அழகாக இருந்தாலும், ‘சீகை’ மரம் அழகிய ஆபத்து எனவும், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பெரும்பாலான இடங்கள், அந்நிய மரங்களின் ஆக்கிரமிப்பு சிக்கியுள்ளன. இவற்றில் முக்கியமான ஆக்கிரமிப்பாளனாக சீகை மரங்கள் உள்ளன. ஆஸ்திரேலியா நாட்டை தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள், 1840-ம் ஆண்டு முதல் நீலகிரியில் நடவு செய்யப்பட்டன. இவை, இயற்கை சமநிலையை பாதித்ததால் 1988-ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வனக் கொள்கையில் நீலகிரி சோலைகள் மற்றும் புல்வெளிகளைப் பாதுகாக்க கற்பூரம் மற்றும் சீகை மரங்களை அகற்ற வனத்துறையினர் முடிவு செய்தனர்.