பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளரான அகிஃப் ஜாவேதை ‘கோமாளி’ என விமர்சித்துள்ளார் ஜேசன் கில்லஸ்பி. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே ஜேசன் கில்லஸ்பி மற்றும் கேரி கிர்ஸ்டன் விலகியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இடைக்கால பயிற்சியாளரை கில்லஸ்பி விமர்சித்துள்ளார்.