பல துறைகளை இணைத்து அவியல் கூட்டு போன்றதொரு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுகவினர் விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு பொருத்தமான உதாரணமே திமுக அரசின் வேளாண் பட்ஜெட். விவசாயத்துக்கு தனி பட்ஜெட்டின் போலி தோற்றம் நிரூபணமாகியிருக்கிறது. 5-வது முறையாக 1.45 நேரம் பட்ஜெட்டை வாசித்ததுதான் இவர்களின் சாதனை. விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. ஏமாற்றமே உள்ளது.