மும்பை: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுக் குழுவினரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 19-ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது.