இஸ்லாமாபாத்: வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணி தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான பாபர் அசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இடம்பெறவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.