மும்பை: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடினால் ஒட்டுமொத்த தேசமும் கோபமடையும் என ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி அன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்ற எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.