ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரசுக்கும் ஆசை உண்டு என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் வெற்றி பெற்று ஆளும்கட்சியாக அதிமுகவும், எதிர்க்கட்சியாக பாஜகவும் அமரும் என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அவருக்கு கவலையே வேண்டாம். தமிழகத்தில் பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோற்றுவிடுவர்.