ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்றப்படுகின்றன. தெலங்கானா மாநிலம், ராமாந்தபூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அன்றிரவு தேர்திருவிழா நடைபெற்றது.
அப்போது மின்சார கம்பங்களில் சுற்றி இருந்த கேபிள், இன்டர்நெட் ஒயர்கள் தேர் மீது உரசியதில், அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கேபிள் ஆபரேட்டர்கள், இன்டெர்நெட் நிறுவனத்தினர் அரசின் மின் கம்பங்களை பயன்படுத்தியதால் மின்சாரம் பாய்ந்து 6 பேர் உயிரிழந்தனர் என விசாரணையில் தெரியவந்தது.