சென்னை: ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளார். வனத்துறை சார்பில் உலக பாம்பு தின நிகழ்ச்சி கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் நேற்று நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ‘தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்’ என்ற தலைப்பில் சிறு நூல் மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார். பாம்பு மீட்பு பணியாளர்களுக்கு மீட்பு கருவிகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நாகம் (NAAGAM) என்ற ஸ்மார்ட்போன் செயலியை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: