புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றனர்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் தகவல்கள் செய்தியாளர்களுக்கு இன்று (மே.7) காலை விவரிக்கப்பட்டது. முதலில் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பதை விவரித்தார்.