காபூல்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் படையினருக்கு இடையே எல்லையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மோதலில் பாக். வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் நேற்று அறிவித்தார்.
ஆப்கன் தலைநகர் காபூல் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள சந்தை ஆகியவற்றில் பாகிஸ்தான் கடந்த வாரம் குண்டு வீசியது. ஆனால் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை.