சென்னை: ஆயிரம் விளக்கு மெட்ரோ நுழைவாயிலை யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன பகுதிக்கு மாற்றக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை – ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலையில் பழமையான ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன. சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்காக, கோயிலின் ராஜகோபுரத்தை இடிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த ஆலயம் காப்போம் கூட்டமைப்பின் தலைவரான பி.ஆர்.ரமணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.